Wednesday, October 20, 2010

பிறக்கும் இடமும் அறியேன்..!
இறக்கும் இடமும் அறியேன்..!
நானிருக்கும் இடமும்
நலம்பெற முயல்பவன்  நானே...

நஞ்சிருக்கும் மனமும்கூட
பிஞ்சுக்குழந்தைகளின் புன்னகையில்
பஞ்சாய்ப்போனதே ..!

இருந்தவரை சேர்த்ததெல்லாம்
மருந்தாய்க்கூட மாறவில்லை ,உடல்
மண்ணைத் தேடி செல்லுமே ...
மனமிருக்கும் போதே
மனிதர்களை சேர்த்து வை...