Friday, February 4, 2011

அவள் நினைவுகள்

தினமும்
இரவுகளில் விழிக்கிறேன்...
விழி ஓரங்களில்
பதுங்கி இருக்கும்
உன் நினைவுகள்
சத்தமிடுவதால்...


எங்கோ
காற்றை விழுங்கி
காதில் கேட்கும்
பாடல்களில் கூட
நீதானடி இருக்கிறாய்...


பல சமயங்களில்
தனிமை பிடிக்கும்..
ஏனெனில் ,
என்னோடு உன்
நினைவுகள் இருப்பதால்...


இப்பொழுதெல்லாம் நான்
மரணத்தைக் கண்டு
அஞ்சுகிறேன்...
என்னோடு சேர்த்து
உன் நினைவுகளையும்
தீயிலிட்டு கொளுத்துவதால்...