Tuesday, October 19, 2010

இரவில்
நிலவுகூட நிம்மதியாக
தூங்குவதில்லை ...
உன் நினைவுகள் 
எப்படி தூங்கும்...

சிரத்தையோடு  நான்
சிரிக்கும் சிரிப்பை
சீக்கிரம் தெரிந்துகொள்ளலாம்
என்னை பார்த்தால்...

நண்பர்களாய் நாம்
நடந்த பாதைகளில்
புற்கள்கூட முளைத்துவிட்டது ...

என்னை கொல்வதற்கு
எதுவும் தேவையில்லை
உன் பிரிந்த நினைவுகள் போதும்...
வறுமை ...
வெறும் வார்த்தையல்ல
வெந்த உணவுக்காக
வெயிலில் அலையும்
வெறுமையான மக்கள்...


மலராத
கருமை ரோஜாக்கள்
கையேந்தி நிற்கும்போது
கடவுள் என்போன்
நிச்சயம் கண்கள்
இழந்தவன்தான்...


ஆசை
வெறும் அகராதியில் மட்டும்
பார்க்கும் பாவ ஜனங்கள்...
ஒரு பக்கம்
சொர்க்கக் கூடுகள்...
மறுபக்கம்
சுருங்கிய கோடுகள்...