Monday, October 18, 2010

என்னை விட்டு விடு

பத்து மாதம்
பரிதவித்து பாசத்தோடு
பெற்றெடுத்த அன்னை...

பஸ் பாஸ்
கேட்ட எனக்கு
ஆசையாக பைக்
வாங்கிதந்த தந்தை...

என்னை எப்போதும்
காப்பாற்றும் சகோதரி...

என் கஷ்டத்தின்
கண்ணீரை  துடைக்க வரும்
நல்ல நண்பர்கள்...

இவர்களை      
கண்ணீரோடு கரைய
வைத்துவிட்டு உன்னோடு
ஓடி வாழ
என் இதயம்
விரும்பாதடி...


No comments:

Post a Comment